NETS: சித்திரை விழா
மே 4, 2013 அன்று நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம், 'நீயா நானா' புகழ் கோபிநாத்தின் 'விவாதமேடை' ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. தலைவர் ரமேஷ் வெங்கட்ரமணி வரவேற்புரை நிகழ்த்தினார். செயலாளர் ராஜ் வேல்முருகன், நடுவர் கோபிநாத் பற்றிய ஒரு குறும்படத்தைத் தொகுத்துத் திரையிட்டார். விவாதத் தலைப்பு: 'வெளிநாட்டில் வாழ்வதால் பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா?'.

இரு குழுக்களும் தத்தமது கருத்துக்களைக் காரசாரமாகக் கூறுகையில், போக்குக்கேற்ப கோபிநாத் செம்மையாக வழிநடத்திய விதம் அருமை. எல்லோருக்கும் பேச வாய்ப்பளித்து, நேரத்தையும் கணக்கில் கொண்டு, தொய்வின்றி நிகழ்ச்சியை எடுத்துச் சென்றது குறிப்பிடத் தக்கது. நன்கு கருத்துக்களைப் பகிர்ந்த, பகிரவுதவிய இருவருக்கு 'மெட்ராஸ் கிரில்' உணவகத்தின் உணவுச் சீட்டு வழங்கப்பட்டது. கோபிநாத்தின் முத்திரை பதித்த முடிவுரை நெஞ்சைக் கொள்ளை கொண்டது. நவீனா சண்முகம் நன்றியுரை வழங்கினார்.

பமிலா வெங்கட்,
போஸ்டன், மாசசூசட்ஸ்

© TamilOnline.com