மரம்
கண்ணில் தெரியும்
மரங்களுக்கெல்லாம்
பெயரிட்டுக் கொண்டிருந்தாள் அவள்!
எங்கிட்ட
இன்னும் ஒரு பெயர் எஞ்சியிருக்கிறது
ஆனால் மரந்தான் இல்லை
அப்பா!
நீங்களே ஒரு மரமாக இருங்கள்;
இந்த மரத்தின் பெயர்
எதையுந்தாங்கி மரம்!

பழமைபேசி
கோலியர்வில், டென்னசி.

© TamilOnline.com