வீரன் முத்து ராக்கு


தீச்சட்டி கோவிந்தன், கரிமேடு கருவாயன், மலையூர் மம்பட்டியான், சீவலப்பேரி பாண்டி போன்று நிஜமாக திருநெல்வேலியில் வாழ்ந்த ஒரு மனிதன் வீரன் முத்து. அவனது வீர தீர சாகசக் கதை ”வீரன் முத்து ராக்கு” என்ற பெயரில் படமாகிறது. வெளுத்துக்கட்டு படத்தில் அறிமுகமான கதிர், வீரன் முத்துவாக நடிக்க, லியாஸ்ரீ நாயகியாக அறிமுகமாகிறார். இசை: கோபாலகிருஷ்ணன். “வீரன் முத்து கதை தென் மாவட்டங்களில் செவி வழி பாடல்களாகத்தான் உள்ளது. அதனை திரைக்கதையாக மாற்றி இருக்கிறோம். அவன் ஒரு சிலம்பாட்ட வீரன். அவனுக்கும் ராக்கு என்ற பெண்ணுக்கும் இடையே உள்ள காதலையும் படத்தில் சொல்வதால் 'வீரன் முத்து ராக்கு' என்று பெயர் சூட்டியிருக்கிறோம் என்கிறார் இயக்குநர் ராஜசேகர்.

அரவிந்த்

© TamilOnline.com