நாலு பேரும் ரொம்ப நல்லவங்க


சிறுவர்களின் மனம் கவர்ந்தவராக மாறியிருக்கும் பவர்ஸ்டார் சீனிவாசன் நடிக்கும் படம் 'நாலு பேரும் ரொம்ப நல்லவங்க'. பக்காத் திருடர்கள் மூன்று பேர் திருட்டை அடியோடு வெறுக்கும் சீனிவாசனைச் சந்திக்கிறார்கள். இவர்கள் சீனிவாசனைத் திருடனாக்க முயற்சிக்க, அவர் இவர்களைத் திருத்த முயற்சிக்க ரிசல்ட் என்ன என்பதைத் தமாஷாகச் சொல்கிறது படம். பாலாஜி, திருப்பதி, யாசின் ஹவேலி என்ற முன்று புதுமுகத் திருடர்களாக அறிமுகமாகின்றனர். சினேஹல், திஷா திருடர்களின் இதயங்களைத் திருடும் அறிமுக நாயகிகள். அப்சர்கான் என்பவர் வில்லனாக அறிமுகமாகிறார். சுரேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசை. ஜோவி என்பவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் இயக்குனர் ஆர்.வி. உதயகுமாரிடம் உதவி இயக்குனராகவும் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியவர். இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜனின் இளையமகன் என்பது கூடுதல் தகவல்.

அரவிந்த்

© TamilOnline.com