டாலஸ்: முத்தமிழ் விழா
ஏப்ரல் 27, 2013 சனிக்கிழமை அன்று, பேரா. சாலமன் பாப்பையா, 'நீயா நானா' கோபிநாத், கவிஞர் அறிவுமதி ஆகியோர் கலந்து கொள்ளும் முத்தமிழ் விழா ஒன்று டாலஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடக்க இருக்கிறது. கோப்பல் மேற்கு நடுநிலைப்பள்ளி (Coppell Middle School West Auditorium) அரங்கில் நடைபெறும் இந்த விழாவில் காலை 10:00 மணிக்கு பேரா. சாலமன் பாப்பையா தலைமையில் பட்டி மன்றம் நடைபெறும். பிற்பகல் 2:00 மணிக்கு 'நீயா நானா' கோபிநாத் நடத்தும் 'வாங்க கலந்து பேசுவோம்' நிகழ்ச்சி நடைபெறும். சாலமன் பாப்பையா, கோபிநாத் ஆகியோர் முதன்முறையாக டாலஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. மாலை 6:00 மணிக்கு கவிஞர் அறிவுமதியின் கவியரங்கமும், தொடர்ந்து 7:00 மணிக்கு 'பாடும் வானம்பாடிகள்' சிங்கர் பிரபு, கோபி சண்முகம் மற்றும் குழுவினர் வழங்கும் மெல்லிசை நிகழ்ச்சியும் இடம்பெறுகின்றன. பட்டிமன்றம் மற்றும் கவியரங்கத்தில் பங்கேற்கக் கலிஃபோர்னியாவிலிருந்து 'தமிழ் இனி' குறும்படம் மற்றும் பனித்துளி திரைப்படப் புகழ் 'திருமுடி' வருகிறார். மேலதிகத் தகவல்களுக்கு: www.dfwmts.org

தினகர்,
டாலஸ், டெக்சாஸ்

© TamilOnline.com