நினைத்தது யாரோ


தமிழ்த் திரையுலகில் ஆபாசம், குத்துப் பாட்டு, இரட்டை அர்த்த வசனம் இல்லாது தரமான படங்களைத் தந்து பெயரெடுத்தவர் இயக்குநர் விக்கிரமன். இவர் தற்போது இயக்கும் படம் 'நினைத்தது யாரோ'. இதில் புதுமுகங்கள் ரிஜித் நாயகனாகவும், நிமிஷா நாயகியாகவும் நடிக்கின்றனர். இயக்குநர் அமீர் இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் - இயக்குநர் அமீராகவே - நடிக்கிறாராம். அதுபோல மோனிகா, இனியா ஆகியோரும் நடிகைகளாகவே படத்தில் தோன்றுகின்றனர். படத்தின் கதை முழுக்க முழுக்கக் காதலை மையமாக கொண்டதாம். இசை: பால்ராஜ்.

அரவிந்த்

© TamilOnline.com