தெரியுமா?: டாக்டர். சாந்தாவுக்கு ஔவையார் விருது
ஆண்டுதோறும் மகளிர் தினத்தன்று, சிறந்த சமுதாய சேவை புரிந்த பெண் ஒருவருக்குத் தமிழக அரசு ஔவையார் விருது வழங்கி கௌரவிக்கும் என்று தமிழக முதல்வர் கடந்த ஆண்டு அறிவித்தார். இந்த ஆண்டுக்கான ஔவையார் விருது அடையாறில் உள்ள புற்றுநோய் நிறுவனத் தலைவர் டாக்டர். சாந்தாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ரூ. 1 லட்சம் ரொக்கம், 8 கிராம் தங்கம், சான்றிதழ் மற்றும் சால்வை ஆகியவை கொண்டதாகும் இவ்விருது. ஏற்கனவே ரேமன் மக்சாஸாய் விருது (Ramon Magsaysay) உள்ளிட்ட பல கௌரவங்களைப் பெற்றவர் டாக்டர். சாந்தா. தென்றலுக்கு அவர் கொடுத்த நெஞ்சைத் தொடும் நேர்காணலை வாசிக்க: தென்றல் ஆகஸ்ட், 2007



© TamilOnline.com