கணிதப் புதிர்கள்
1) வரிசையில் அடுத்து வர வேண்டிய எண் எது, ஏன்? 1, 1, 4, 8, ...... ?

2) இரண்டு ஆட்கள், தினமும் இரண்டு மணி நேரம் வேலை செய்து இரண்டு நாட்களில் இரண்டு ஏக்கர் நிலத்தை செப்பனிடுகிறார்கள். அப்படியென்றால் நான்கு ஆட்கள், தினமும் நான்குமணி நேரம், நான்கு நாட்கள் வேலை செய்தால் எத்தனை ஏக்கர் நிலத்தைச் செப்பனிட முடியும்?

3) A, B, C என்ற மூன்று நபர்களின் வயதின் பெருக்குத் தொகை 72. அவர்களில் C-யின் வயது ஆறு வருடம் கழித்து 12 ஆகிறது. இதில் B என்பவர் குழந்தை என்றால் அவர்கள் ஒவ்வொருவரின் வயது என்ன?

4) ஒன்று விட்டு ஒன்றாக உள்ள ஐந்து வீட்டுக் கதவு இலக்கங்களின் கூட்டுத்தொகை 525 என்றால் அந்த எண்கள் எவை?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com