கிரீன்வில்லில் புத்தாண்டுக் கொண்டாட்டம்
ஆர்ச்சேடு ·பர்ம்ஸ் பொதுவிடுதியில் டிசம்பர் 31, 2005 அன்று புத்தாண்டை வரவேற்கும் முகத்தான் கீழ்க்கண்ட நிகழ்வு கள் அழகுற நடைபெற்றன.

யோகாசிரியர் மதுரை புலவர் கே. கணேசன் அவர்கள் ஏற்ற விளக்கங் களுடன் உடலுக்கும் உள்ளத்துக்கும் நலத்தைத் தருவதான யோகாசனங்களைக் காலை நிகழ்ச்சியில் செய்து காட்டினார்கள்.

ரதிநாக் அவர்கள் கணித நுண்ணறிவுப் போட்டிகள், கூர்மையான நுட்பக் கவனிப்பு, இசை நாற்காலி போன்ற துடிப்பான போட்டிகளை மாலை நிகழ்ச்சியில் நடத்தினார்கள். வெற்றி பெற்றவர்க்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

லக்ஷ்மணன்,
கிரீன்வில், தென் கரோலினா

© TamilOnline.com