ஆன்மிக உரை: எம்.கே. ராமனுஜம்ஜி
சத்குரு ஸ்ரீஸ்ரீ முரளீதர சுவாமிகள் நாம சங்கீர்த்தனத்தின் மகிமையை உலகெங்கும் பரப்பி வருகிறார். அவரது சிஷ்யரான ஸ்ரீ ராமானுஜம் அமெரிக்கா முழுவதும் பயணம் மேற்கொண்டு பாகவத தர்மத்தைப் பற்றியும், கிருஷ்ணார்ப்பணம் என்னும் தலைப்பிலும் பல சொற்பொழிவுகளை கோடிவினிடி (Godivinity) என்னும் லாப நோக்கற்ற அமைப்பின் மூலம் நிகழ்த்திவருகிறார். அண்மையில் இவரது சொற்பொழிவுகள் சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியின் சன்னிவேலில் உள்ள சனாதன தர்ம கேந்திராவில் 2012 டிசம்பர் 5, 6, 7 தேதிகளில் நடைபெற்றன. இதேபோல் ஹூஸ்டன், ரெட்டிங், பாஸ்டன் மற்றும் பல இடங்களிலும் பாகவத சப்தாஹமும், குழந்தைகளின் கோபகுடீரம் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தினமும் சிறிது நேரம் நாம சங்கீர்த்தனம் நடைபெற்றது. பல முதியோர் இல்லங்களிலும் அவர் நாம சங்கீர்த்தனத்தைப் பற்றி உரையாடினார். சிறியோருக்குத் தலைமைப் பண்புகள் செயலரங்குகளும், பெரியவர்களுக்கு உள்மன உயர்மாற்றச் செயலரங்குகளும் இன்டெல், சிஸ்கோ போன்ற பல நிறுவனங்களிலும் நடத்தினார்.
ஒவ்வொரு வாரமும் ஃப்ரீமாண்ட் கோவிலிலும், சான் ரமோன், சான் ஹோசே, கூப்பர்டினோ ஆகிய இடங்களிலும் சத்சங்கங்கள் நடைபெறுகின்றன.

மேலும் விவரங்களுக்கு 18304godusa அல்லது 408.773.8548 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளுங்கள்.
வலைமனைகள்: www.namadwaar.org, www.godivinity.org

ஸ்ரீவித்யா,
சன்னிவேல், கலிஃபோர்னியா

© TamilOnline.com