டாலஸ்: திருக்குறள் போட்டி: பரிசு 5000 டாலர்கள்
பிப்ரவரி 9, 2013 சனிக்கிழமை அன்று, சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சார்பாக டெக்சாஸ் மாநில அளவிலான திருக்குறள் போட்டி டாலஸில் நடைபெறும். டாலஸ், ஹூஸ்டன், சான் அன்டோனியோ, ஆஸ்டின், டெம்பிள், காலேஜ் ஸ்டேஷன் உள்ளிட்ட பிற டெக்சாஸ் நகரங்களிலிருந்தும் 200 குழந்தைகள் போட்டியில் கலந்து கொள்வார்கள். என எதிர்பார்க்கப்படுகிறது. வயது வாரியாக நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று பரிசுகள் தவிர, உபரியாக குழந்தைகள் பிரிவில் முழு விளக்கத்துடன் ஒரு குறள் சொன்னால் ஒரு டாலர் பரிசும் கொடுக்கப்படும். இவ்வாறு குழந்தைகள் எல்லோருமாக 5000 டாலர்களைப் பரிசாகப் பெறுவார்கள் என்று கணிக்கப்படுகிறது. முதன்முதலாகப் பெரியோருக்கென, 16 முதல் 25 வயதுவரை, 26 வயதுக்கு மேற்பட்டோர் என இரண்டு கூடுதல் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

பேச்சுப் போட்டி: அமெரிக்கத் தமிழ்க் குழந்தைகள் தமிழ் மறையாம் திருக்குறளைப் படித்து, புரிந்துகொண்டு, அதன் வழி நடக்க வேண்டும் என்பதைத் தாண்டி, மேடைப் பேச்சாற்றலை வளர்ப்பதற்காக பேச்சுப் போட்டியும் நடைபெறுகிறது. போட்டியில் வெற்றி பெறுபவர்கள், பிப்ரவரி 9ம் தேதி மாலை நடைபெறும் திருக்குறள்-திருவள்ளுவர் விழா மேடையில் உரையாற்றுவார்கள்.

மேலதிகத் தகவல்களுக்கு:
வலைமனை: www.pltamil.com
மின்னஞ்சல்: pltamil@gmail.com, dallaskural@gmail.com

தினகர்,
பிளேனோ, டெக்சாஸ்

© TamilOnline.com