ஒன்


படத்தின் தயாரிப்பு, இயக்கம் முதல் லைட்பாய் வரை அத்தனை வேலைகளையும் தான் ஒருவரே செய்து சங்ககிரி ராஜ்குமார் இயக்கி இருக்கும் படம் ஒன். இவர் ஏற்கனவே 'வெங்காயம்' என்ற படத்தைத் தந்தவர். தற்போது உலக சாதனைக்காக இப்படத்தை இயக்கி இருக்கிறார். மர்மக் காட்டுக்குள் மாட்டிக் கொள்ளும் நான்கு பேர் சந்திக்கும் வித்தியாசமான அனுபவந்தான் படத்தின் கதை. இதை ஒன்பது வருடங்களாக உழைத்து உருவாக்கியிருக்கிறார். போதாததற்கு, நான்கு வேடங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். படம் பற்றி ராஜ்குமார், “இது அதிகப் பிரசிங்கத்தனமோ, எனக்கு எல்லாம் தெரியும் என்று காட்டிக் கொள்வதற்காகவோ எடுக்கப்படவில்லை. தமிழனால் எதுவும் செய்ய முடியும் என்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது" என்கிறார். படத்தின் அறிமுக விழா அமெரிக்காவில் நடக்குமாம். அதுக்காவது வேற யாரையாவது கூப்பிட்டா சரிதான்.

அரவிந்த்

© TamilOnline.com