புஷ்பாஞ்சலியின் 16வது ஆண்டு விழா
டிசம்பர் 1, 2012 அன்று புஷ்பாஞ்சலி நடனப் பள்ளியின் 16வது ஆண்டு விழா கபர்லி தியேட்டரில் நடைபெற்றது. பெர்க்கலி பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் கௌசல்யா ஹார்ட் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துச் சிறப்புரை ஆற்றினார். இறைவணக்கத்துக்குப் பின், திருப்பாவை, புஷ்பாஞ்சலி, அலாரிப்பு, கணேச கௌத்துவம், முருகன் கௌத்துவம், மகாதேவ சிவசம்போ, மதுராஷ்டகம், நடேச கெளத்துவம் முதலியவற்றை மாணவியர் வெகு அழகாக வழங்கினர். தில்லானாவுடன் நிகழ்ச்சி நிறைவெய்தியது. குரு மீனா லோகன் மாணவிகளுக்கு நினைவுக் கோப்பை வழங்கினார். சிவ முருகன் கோவில் தலைமை குருக்கள் ஆனந்த் வாழ்த்துரை, கோவில் பிரசாதம் வழங்கினார். விழாவில் திரட்டப்பட்ட நிதி கான்கார்டு சிவ முருகன் கோவில் விரிவாக்கப் பணிகளுக்குத் தரப்பட்டது.

ராஜேஸ்வரி ஜயராமன்,
சான்டா கிளாரா, கலிஃபோர்னியா

© TamilOnline.com