மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்
நவம்பர் 20 முதல் 24ம் தேதிவரை அம்மா ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி மிசிகனில் உள்ள டெட்ராயிட்டுக்கு வருகை தந்தார். அவர் தம்மைக் காணவந்தோரைப் பரிவோடு அரவணைத்து, அளவற்ற அன்பை வழங்கினார். தினமும் ஆன்மீக சொற்பொழிவு, தியானம், பஜனை, தரிசனம் ஆகியவை நடைபெற்றன. ஆன்மீக முகாமில் ஆன்மீக, தியான வகுப்புகள், சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், உணவு பரிமாறல், ஒருங்கிணை அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெற்றன.

அம்மாவின் அமுதமொழி:
"இறைவனிடம் காட்டும் பக்தி என்பது, அனைத்து உயிரினங்களிடமும் நாம் காட்டும் அன்பாகும். இதல்லாமல், வெறும் பிரார்த்தனை செய்வது பக்தியல்ல. இறைவன் ஆகாயத்திற்கு அப்பால் இருப்பவரல்ல. நம் எல்லோருடைய உள்ளத்தின் உள்ளேயும் அவர் வசிக்கிறார். இந்த மனோபாவத்தை நாம் வளர்க்க வேண்டும். அதற்குப் பணிவு மிகவும் அவசியம். இதற்காக நாம் ஒரு பெரிய தியாகம் செய்ய வேண்டும் - அது அகம்பாவத் தியாகம். அகம்பாவமே அனைத்திற்கும் தடையாக இருக்கிறது. இதைத் துறப்பதன் மூலம் நாம் வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம்."

அம்மா ஆற்றும் பொதுநலத் தொண்டுகளைப் பற்றி அறிய: www.amritapuri.org

மேலும் விபரங்களுக்கு: www.amma.org

சூப்பர் சுதாகர்

© TamilOnline.com