போரிடப் பழகு


குழந்தை நட்சத்திரமாக நடித்துப் புகழ்பெற்றவர் மாஸ்டர் மகேந்திரன். அவர் கதாநாயகனாக நடிக்கும் படம் 'போரிடப் பழகு'. நீலாம்பரி என்ற புதுமுகம் நாயகியாக அறிமுகமாகிறார். “மணல் ஃமாபியாக்கள் எப்படி உருவாகின்றன, அவற்றின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதையும், ஆற்று மணல் அள்ளப்படுவதால் ஏற்படும் பிரச்சினைகளையும் இப்படத்தில் சொல்லியிருக்கிறோம். மணல் ஃமாபியாவை எதிர்த்து போராடும் ஒரு வீரனின் கதையும், அவனது காதலும் இப்படத்தில் உண்டு. நிஜமாகவே மணல் கொள்ளை நடக்கும் இடத்தில் படப்பிடிப்பு நடத்தி வருகிறோம்” என்கிறார் இயக்குனர் சேகர் பாரதி. இவர் தயாரிப்பாளர், இயக்குநர் தக்காளி சீனிவாசனிடம் உதவியாளராக இருந்தவர். மணல் ஃமாபியா தலைவனாக ரியாஸ்கான் நடிக்கிறார். இசையமைக்கிறார் இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி.

அரவிந்த்

© TamilOnline.com