இயக்குநர் நாயகனாகிறார்
முதன் முதலாக 'தலைநகரம்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார் குஷ்புவின் கணவரும் இயக்குநருமான சுந்தர். சி.

இப்படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரித்து அளிக்கிறது. படத்தில் சுந்தர். சி.க்கு ஜோடியாக நடிப்பவர் பிரபல மலையாள நடிகை ஜோதிர்மயி. இவருக்கும் இது முதல் தமிழ்ப் படமாகும்.

தமிழகத்தின் தலைநகர் சென்னை எப்படி ஒவ்வொரு மனிதனையும் மாற்றிவிடுகிறது என்பதைச் சுவராசியமாகச் சொல்லும் படம் 'தலைநகரம்'. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் போன்றவற்றைக் கவனிக்கிறார் சுராஜ்.

நா.முத்துகுமார், பா.விஜய் ஆகியோரின் பாடல்களுக்கு டி. இமான் இசையமைக்கிறார். சுந்தர் சி.யுடன் இப்படத்தில் பிரகாஷ்ராஜ், வடிவேலு, மெட்டிஒலி புகழ் போஸ் வெங்கட், டெல்லிகணேஷ் என்று பிரபலங்கள் பலர் நடிக்கின்றனர்.

முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார் ஸ்டண்ட்மாஸ்டர் ஜுடோ ரத்னம்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com