சாக்ரமென்டோ: தசரா விழா
அக்டோபர் 14, அன்று தசரா விழா சாக்ரமென்டோ சித்திவிநாயகர் கோயிலில் நடந்தேறியது. குழந்தைகளுக்கான மாறுவேடப் போட்டி மற்றும் டயோரமா கண்காட்சி மற்றும் போட்டிகள் நடைபெற்றன. வேடமணிந்த குழந்தைகளைப் பார்த்தபோது, நவராத்திரி தொடங்குவதற்கு முன்னாலேயே பொம்மைகள் உயிர்பெற்று நடமாடியதைப் போல இருந்தது. இதை நடத்திய ஜயந்தி ஸ்ரீதர் கேட்ட கேள்விகளுக்கு குழந்தைகள் சொன்ன பதில்கள் பார்வையாளர்களைச் சிரிக்கவும் வைத்தன. உதாரணத்துக்கு, "நீ வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?" என அசோகவனத்துச் சீதை வேடமணிந்த குழந்தையைக் கேட்க அது "ஆமாம்" என்று சொல்லி, மைக்கை வாங்கிக் கொண்டு "நிலா நிலா ஓடி வா" பாட ஆரம்பித்ததைச் சொல்லலாம். முருகன் வேடமணிந்த மற்றொரு குழந்தையிடம், "உன் அம்மா, அப்பா யார்?" என்று கேட்கவும் 'டக்'என்று பதில் சொன்ன குழந்தை, "உன் மனைவியின் பெயர் என்ன?" என்று கேட்டதும் "தெரியாது, அம்மா சொல்லித் தரலை" என்றது.

அர்ச்சனா பரமேஸ்வரன்,
கலிபோர்னியா

© TamilOnline.com