உயிர்
இறைவன் தன் சுவாசத்தை நிரப்பி
உயிர் தந்தானாம்
மனிதர்களுக்கு!
எனக்கு மட்டும் அவன்
அத்தனை மெனக்கிடவில்லை
மெதுவாய்
உன் பெயரை காதில் உச்சரித்தான்...
அவ்வளவே!

தேவி அருள்மொழி அண்ணாமலை,
சிகாகோ, இல்லினாய்

© TamilOnline.com