Access Braille: 'சரணாகதி'
செப்டம்பர் 8, 2012 அன்று சுதா ராஜகோபாலன், ஒன்பது வகை பக்தி முறைகளில் ஒன்றான 'சரணாகதி' குறித்த ஹரிகதை நிகழ்ச்சியை வழங்கினார். சிறந்த பக்தரான கோராகும்பர் தனது கைகள், குழந்தை, வீடு அனைத்தையும் இழந்த பிறகும் பாண்டுரங்க விட்டலன் மீது அபரிமிதமான பக்தி கொண்டிருந்ததைச் சுதா அழகாக விளக்கினார். சுதாவுடன் உஷா பிரபு பாடிய பஜனை மற்றும் அபங் பாடல்கள் வெகு அழகு. ஜன்மாஷ்டமியன்று ஹரியின் கதை கேட்டது பக்தி விருந்தாக அமைந்தது.

Access Braille என்னும், பார்வையற்ற குழந்தைகளின் கல்விக்கு உதவும் அமைப்புக்கு, நிதி திரட்டும் நிகழ்ச்சியாக இது அமைந்தது. சாய் அனுராக் ஸ்ரீமத் என்னும் உயர்நிலைப் பள்ளி மாணவர் நிகழ்ச்சியில் தபலா வாசித்தார். பக்தி வெள்ளம் ஒருபுறம் மனதில் பெருக, மறுபுறம் பார்வையற்ற குழந்தைகளின் கல்வி நலனுக்காக நம்மால் இயன்ற உதவியைச் செய்ய முடிந்தது என்ற நிறைவுடன் அவையோர் நிகழ்ச்சியை ரசித்தனர். இந்நிறுவனத்துடன் இணைந்து தொண்டு செய்யவும் நிதி வழங்கவும்: www.accessbraille.org

ஆங்கிலத்தில்: விக்ரம் பாரதி,
ஏழாம் வகுப்பு, கூப்பர்டினோ, கலிஃபோர்னியா

தமிழாக்கம்: சுதா லக்ஷ்மிநாராயணன்,
கூப்பர்டினோ, கலிஃபோர்னியா

© TamilOnline.com