உயிர்மொழி


புதுமுகங்கள் பலர் அறிமுகமாகும் படம் உயிர்மொழி. ராஜா என்ற புதுமுக இயக்குநர் இயக்குகிறார். இந்தப் படத்தின் கதை உலகம் தோன்றிய பனியுகத்தில் தொடங்கி கற்காலம், மன்னர்கள் காலம் என பல காலங்கள் கடந்து 2012ல் முடிகிறதாம். இதுபற்றி இயக்குனர் ராஜா, "உலகில் உள்ள மனிதர்களை டி.என்.ஏ அடிப்படையில் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, ஒமேகா என ஐந்து வகையாக பிரிக்கலாம். இந்த ஐந்து வகையினரும் வெவ்வேறு குணாதிசயங்களை கொண்டவர்கள். இவர்கள் ஐஸ் ஏஜ் காலத்தில் தொடங்கி இப்போதுவரை எப்படி குணமாற்றம் பெற்றிருக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. இதனால் எல்லாக் காலங்களிலும் கதை பயணிப்பதாக படத்தை உருவாக்கி இருக்கிறோம். இந்த ஐந்து வகைக் கால மனிதர்களிடையே ஒரு பார்வையற்ற பெண் வருகிறாள். ஐவருமே அவளைக் காதலிக்கிறார்கள். அவள் யாரைத் தேர்வு செய்கிறாள், ஏன் என்பது தான் படத்தின் முக்கியமான திருப்புமுனை" என்கிறார். உண்மையிலேயே வித்தியாசமான கதைதான்.

அரவிந்த்

© TamilOnline.com