கொலராடோ: 'நீயா-நானா'
ஆகஸ்ட் 18, 2012 அன்று கொலராடோ தமிழ்ச் சங்கம் திருமதி உமையாள் முத்துவை நடுவராகக் கொண்டு 'நீயா- நானா' என்ற நிகழ்ச்சியை நடத்தியது. நிகழ்ச்சிக்கு முன்னர் அவர் கண்ணதாசன் பற்றி வழங்கிய சொல்மழையில் எல்லோரும் கட்டுண்டு இருந்தனர். 'நீயா-நானா'வின் தொடக்கத்தில் 'சொல்லின் செல்வி' அவர்கள், அமெரிக்காவில் வாழும் இந்தியக் குழந்தைகள் கலாசார மாறுபாடுகளால் பெற்றோரிடம் பெறுவது ஆதரவா, துன்பமா என்ற தலைப்பை விளக்கிப் பேசினார். இரு அணியினரும் அமைதியாகவும், விவேகமாகவும் வாதாடினர். அணிகளில் இளைய தலைமுறையினரும் இருந்தனர். 'துன்பமே' என்று முடிவைக் கூறி, அதை அழகாக விவரித்தார் நடுவர்.

கலைவாணி,
டென்வர், கொலராடோ

© TamilOnline.com