கண்டதும் காணாததும்


ஒரே கல்லூரியில் படிக்கும் நாயகனும், நாயகியும் நல்ல நட்புடன் பழகி வருகிறார்கள். திடீரென்று அவர்கள் நட்பில் சிக்கல்! நாயகன், நாயகி பிரிகின்றனர். அது என்ன சம்பவம், அவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா, நட்பு காதலானதா மாறியதா போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல வருகிறது 'கண்டதும் காணாததும்'. நாயகனாக விகாஷும் நாயகியாக சுவாசிகாவும் நடிக்க சீலன் இயக்குகிறார். ஆர். சுந்தர்ராஜன், பரோட்டா சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பாடல்களை நந்தலாலா, தமிழமுதன், வசீகரன் ஆகியோர் எழுத, வி. சார்லி இசையமைக்கிறார். விரைவில் திரைக்கு வர இருக்கிறது இப்படம்.

அரவிந்த்

© TamilOnline.com