உயிர் எழுத்து


'பயணங்கள் முடிவதில்லை', 'மெல்லத் திறந்தது கதவு', 'வைதேகி காத்திருந்தாள்', 'ராஜாதி ராஜா', 'அம்மன் கோயில் கிழக்காலே', 'குங்குமச் சிமிழ்' போன்ற வெள்ளி விழாப் படங்களைத் தந்தவர் இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அவர் இயக்கும் படம் 'உயிர் எழுத்து'. "நட்பையும், அதன் தியாகங்களையும் சொல்லும் ஒரு யதார்த்தமான படைப்பு இது” என்கிறது கோலிவுட் வட்டாரம். ராகவா லாரன்ஸ், வசீகரன் நாயகர்களாக நடிக்க, கீர்த்திசாவ்லா நாயகியாக நடிக்கிறார். பாடல்கள்: கங்கை அமரன், பா. விஜய், ஆர். சுந்தர்ராஜன். இசை: தேவா. கதை, திரைக்கதை, வசனம், எழுதி ஆர். சுந்தர்ராஜன் இயக்குகிறார்.

அரவிந்த்

© TamilOnline.com