மாயவரம்


எவ்வளவு பெரிய வீரனையும், முரடனையும் அன்பால் மாற்ற முடியும் என்ற கருத்தினை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் படம் மாயவரம். இதில் கிருஷ்ணலீலை, சூரி போன்ற படங்களின் இயக்குநரான ஷெல்வன் நாயகனாக நடிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், எழுதி முரளி இயக்குகிறார். ஒரு முரடனைக் கண்டு ஊரே அஞ்சுகிறது. ஒரு பெண் அவனை எதிர்கொள்கிறாள், அவனை மாற்றுகிறாள். அஞ்சி நடுங்கிய மக்களை அவன் அன்பாக பார்க்கிறான். அவனை மாற்றிய அந்த பெண்ணின் மீது காதல் கொள்கிறான். இறுதியில் அவன் காதல் வென்றதா, மக்கள் அவன் மீது அன்பு செலுத்தினார்களா என்பதை விறுவிறுப்பான திரைக்கதையுடன் சொல்ல வருகிறது மாயவரம். ஸ்ரீசாய் இசையமைத்துள்ளார். பெருமளவு படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் விரைவில் திரைக்கு வர இருக்கிறது இப்படம்.

அரவிந்த்

© TamilOnline.com