தெரியுமா?: கலிபோர்னியா பல்கலை தமிழ்த்துறை ஒன்பதாம் மாநாடு
கலிபோர்னியா தமிழ்த்துறையின் ஒன்பதாம் ஆண்டு மாநாடும், தமிழ்ப்பீடத்தின் எட்டாவது மாநாடும் 2012 ஏப்ரல் 20, 21, 22 தேதிகளில் நடக்க இருக்கிறது. இதில் பல்வேறு பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் அறிஞர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர். பேரா. ஆனந்த் பாண்டியன், பேரா. பெர்னார்டு பேட், பேரா. ஜெனிபர் கிளேர், பேரா. சாஷா எபிலிங், பேரா. இந்திரா பீட்டர்சன், பேரா. தேவேஷ் சேனேஜி, பேரா. கான்ஸ்டன்டைன் நகாசிஸ், பேரா. பிளேக் வென்ட்வொர்த், எலேன் கிரடாக், விஜயா நாகராஜன், பேரா. ஜினி இஸ்து மாத்சு, பேரா. வாசு அரங்கநாதன், அப்பாசாமி முருகையன் ஆகியோர் இம்மாநாட்டில் கட்டுரை வழங்க உள்ளனர்.

கௌசல்யா ஹார்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com