முயல்


வாழ்க்கையில் எந்தத் துன்பத்தையும் அனுபவித்திராத மூன்று நண்பர்கள் கல்லூரிப் படிப்பை முடித்தபின் ஒரு தொழில் செய்ய முயல்கிறார்கள். அப்போது ஏற்படும் சில சிக்கல்கள் அவர்களது வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது. அந்தப் பிரச்சனைகள் வேறு யாருக்கும் வரக்கூடாது என அவர்கள் செய்யும் முயற்சிகள்தான் 'முயல்'. 'மதுரை டு ஆண்டிப்பட்டி', 'சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி' போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய எஸ்.பி.எஸ். குகன் இப்படத்தை இயக்குகிறார். ஜேவி இசையமைக்கிறார். புதுமுகம் முரளி கதாநாயகனாகவும், சரண்யா நாயகியாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் ராஜ்குமார், பிரபு, மீரா கிருஷ்ணன், ஷிவானி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். புகைப்படக் கலைஞர்களும், ஒளிப்பதிவாளர்களுமாக சுமார் 5000 பேர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர் என்பது போனஸ் தகவல்.

அரவிந்த்

© TamilOnline.com