ஓடு... ஓடு.... ஓடு...


சிறு வயதில் நட்போடு பழகிய ஒரு ஆணும், பெண்ணும் காலப்போக்கில் எதிரிகளாக மாறுகிறார்கள். அந்த ஆணின் மகனும், பெண்ணின் மகளும் ஒருவரையொருவர் காதலிக்க, அதை விரும்பாத இவர்கள் அவர்களைக் கொல்லத் துரத்துகிறார்கள். அவர்கள் ஓட... இவர்கள் துரத்த கடைசியில் என்ன ஆகிறது என்பதுதான் தினேஷன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் 'ஓடுதளம்' படத்தின் கதை. படத்தின் நாயகனாக ஸ்ரீஜித்தும், நாயகியாக ரூபிகாவும் அறிமுகமாகின்றனர். பெற்றோராக ஆதித்யா மேனனும், ஐஸ்வர்யாவும் நடிக்கின்றனர். ரமேஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com