பிரபல டாக்டர் செரியன் நடிக்கும் நினைத்து நினைத்துப் பார்த்தேன்
நடிகர் விஜய்யின் தம்பி விக்ராந்த் நாயகனாக நடிக்க 'நினைத்து நினைத்துப் பார்த்தேன்' என்ற புதிய படத்தை ஜே.ஜே. குட் பிலிம்ஸ் சார்பில் பா. ராஜா தயாரிக்க விருக்கிறார். நாயகியாக தில்லியைச் சேர்ந்த ஆஷிதா அறிமுகம் ஆகிறார்.

இயக்குநர் செல்வராகவனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மணிகண்டன் இப்படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் படத்திற்கான கதை, திரைக்கதை ஆகியவற்றையும் எழுதுகிறார்.

உலகில் உள்ள எல்லா உயிர்களும் பொது வானவை. மதத்தின் பெயராலோ, நாட்டின் பெயராலோ, இனத்தின் பெயராலோ யாரும் உயிர்விடக்கூடாது என்கிற கருத்தை வலி யுறுத்துவதே 'நினைத்து நினைத்துப் பார்த் தேன்' கதையின் கரு. பிரபல இருதய மாற்று அறுவை சிகிக்சை நிபுணர் டாக்டர் செரியன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க விருக்கும் இப்படத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு 'ஒருதலை ராகம்' சங்கர் நடிக்கிறார் என்பது முக்கிய செய்தியாகும். சங்கருக்கு ஜோடியாக ரோஜா நடிக்கிறார். ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைப்பில் உருவாகவிருக்கும் இப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது.

கேடிஸ்ரீ

© TamilOnline.com