இல்லினாய்: வீடற்றோருக்கு உணவளித்தல்
நவம்பர் 20, 2011 அன்று மதியம் மிட்வெஸ்ட் தமிழ்ச் சங்கம், பன்னாட்டுத் தமிழ் மொழி அறக்கட்டளை மற்றும் USA தமிழ்ப் பள்ளிகள் இணைந்து வீடற்றோருக்கு உணவளிக்கும் நிகழ்ச்சியை நடத்தின. அரோராவில் உள்ள ஹெஸட் ஹவுஸ் என்ற இடத்தில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஏறக்குறைய 120 பேர் உண்டு மகிழ்ந்தனர். தமிழர் நன்றி நவிலல் நாளான நவம்பர் 27ஐ முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் சிகாகோ தமிழ்ப் பள்ளியின் நவனீதா, சுபா, ஸ்வேதா, ஆகாஷ், நிஷாந்த், விஷால், ஸ்ரீராம், பூர்ணகலா, விஜி, புஷ்பா, ஜோசப், சந்த்ரு, பார்த்திபன், பாபு ஆகியோருடன் தமிழ்ச் சங்க உறுப்பினர்களும் ஆர்வத்துடன் தொண்டாற்றினர். தமிழர் இலக்கியம், வரலாறு, பண்பாடு குறித்த சிறு நூல் ஒன்றும் அங்கே வழங்கப்பட்டது. ஹெஸட் ஹவுஸின் உணவு ஒருங்கிணைப்பாளர் டானி மற்றும் உதவியோருக்கு நன்றி தெரிவித்து நிகழ்ச்சி நிறைவேறியது.

வ.ச. பாபு,
இல்லினாய், சிகாகோ

© TamilOnline.com