அரிசோனாவில் தீபாவளிக் கொண்டாட்டம்
அக்டோபர் 30, 2011 அன்று அரிசோனா மாநிலத் தமிழர்கள், தீபாவளிப் பண்டிகையை சிடி ஆப் சாண்ட்லரின் பெருமை வாய்ந்த சாண்ட்லர் சென்டர் ஆப் ஆர்ட்ஸ் அரங்கில் கொண்டாடினர். ஜெகதீசன் கிருஷ்ணமுர்த்தி அவர்களின் தலைமையில் அரிசோனா தமிழ் சங்கம் இவ்விழாவை நடத்தியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இவ்விழாவில், ஆட்டம், பாட்டம், நாடகம் என்று பல்வேறு விதமான நிகழ்ச்சிகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை 250க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அரிசோனா தமிழ்ச் சங்கம் நடத்திவரும் தமிழ்ப் பள்ளி மாணவர்களும் இதில் பங்கு பெற்றனர். பங்கேற்றவர்களுக்கு Amazing Jakes என்னும் விளயாட்டு மையத்திற்கு இலவச நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டது. பாரம்பரிய நடனம், சினிமா நடனம் மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்கு சுழல்கோப்பை வழங்கப்பட்டது. அஷ்வின் விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். விழா இந்திய தேசிய கீதத்துடன் நிறைவுற்றது.

ஜெகதீசன்,
சாண்ட்லர்

© TamilOnline.com