டல்லாஸில் திருக்குறள் போட்டி
ப்ளேனோ தமிழ்ப் பள்ளி சார்பாக வருடந்தோறும் திருக்குறள் போட்டி நடைபெற்று வருகிறது. ப்ளேனோ வட்டார அளவில் நடைபெற்று வந்த இந்தப் போட்டி முதன்முறையாக டல்லாஸ் மாநகர அளவுக்கு விரிவாக்கப்பட்டுள்ளது.

வயதுவாரியாக மூன்று பிரிவுகளாகப் போட்டிகள் நடைபெறும். பங்கேற்கக் குறைந்தபட்சத் தகுதி:

5 முதல் 7 வயது: மூன்று குறள்கள்
8 முதல் 11 வயது: ஆறு குறள்கள்
12 முதல் 15 வயது: ஒன்பது குறள்கள்

டல்லாஸ் மாநகரப் பகுதியில் வசிக்கும் குழந்தைகள் போட்டியில் கலந்து கொள்ளலாம். பங்கேற்பவர்கள் திருக்குறளை ஒப்பித்து, விளக்கவுரையும் சொல்ல வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் அதிகக் குறள்களை, விளக்கவுரையுடன் கூறி வெற்றி பெறுபவர்களுக்குப் பணமுடிப்பும் சான்றிதழும் வழங்கப்படும். விளக்கவுரையுடன் நூறு திருக்குறள்கள் சொல்லும் குழந்தைகளுக்கு சிறப்புப் பரிசு உண்டு.

விண்ணப்பங்களைத் தரவிறக்கம் செய்ய: www.pltamil.com

விண்ணப்பங்களை நவம்பர் 30ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல்: dallaskural@gmail.com.
போட்டி நாள்: சனிக்கிழமை, பிப்ரவரி 11, 2012.

தினகர்,
ப்ளேனோ, டெக்சாஸ்

© TamilOnline.com