வழிவிடு கண்ணே வழிவிடு


அன்பை போதித்து எல்லோரையும் நேசிக்க கற்றுக்கொடுத்த தாயை கடைசிவரை காப்பாற்றும் பிள்ளைகள் இன்றைக்குக் குறைந்து விட்டார்கள். முதியோர் இல்லங்களில் சேர்த்து அவர்களைத் தவிக்க விடுகிறார்கள். அப்படித் தாயை மதிக்காத பிள்ளையின் கதி கடைசியில் என்னவானது என்பதைச் சொல்லவரும் படம் 'வழிவிடு கண்ணே வழிவிடு'. நாயகனாகத் தமிழ் அறிமுகமாகிறார். நாயகியாக மதுஸ்ரீ அறிமுகமாகிறார். சார்லி, டி.பி. கஜேந்திரன், பூவிலங்கு மோகன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். திரைக்கதை எழுதி இயக்குகிறார் கௌரி சங்கர்.

அரவிந்த்

© TamilOnline.com