பாட்டி செய்த லூட்டி


எந்தவித ஆதரவும் இல்லாமல் கிராமத்திலிருந்து சென்னைக்கு வரும் மூன்று பேர் பாட்டி ஒருவரைச் சந்திக்கின்றனர். அந்தப் பாட்டியால் அவர்கள் படும் அவஸ்தையும், அதிலிருந்து மீள்வதற்காக அவர்கள் நடத்தும் போராட்டமும் தான் 'அரிதாரம்' படத்தின் கதை. நாயகனாகத் தமிழ் என்பவரும், நாயகியாக ஸ்ரீவிஜயாவும் அறிமுகமாகின்றனர். உடன் புதுமுகங்கள் பலர் நடிக்கின்றனர். இயக்குநர் பலரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஆர்.டி. அலெக்சாண்டர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். ரூபேஷ்ராம் இசையமைக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com