மிச்சிகனில் ஹோமம்
ஜூலை 24, 2011 அன்று மிச்சிகன் பாரதீய கோவிலில் பஞ்சசூக்த ஹோமம் நடைபெற்றது. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக அதன் முதன்மைப் புரோகிதராக இருக்கும் ஜானகி ராம சாஸ்திரி விட்டாலா அவர்களின் தலைமையில் இது நடந்தேறியது. கணபதி ஆவாஹனத்தில் தொடங்கி, முறையே புருஷ சூக்தம், ஸ்ரீ சூக்தம், ஸ்ரீ ருத்ரம், சமகம், துர்கா சூக்தம் ஆகியவை ஓதப்பட்டன. பிறகு மகாதீப ஆராதனையும் அன்னதானமும் நடந்தேறின. வரும் அக்டோபர் மாதம் இவ்வாலயத்தின் புதிய கட்டிடக் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

காந்தி சுந்தர்,
மிச்சிகன்

© TamilOnline.com