அரிசோனா: மெல்லிசை மாலை
ஏப்ரல் 24, 2011 அன்று அரிசோனா தமிழ்ச் சங்கத்தின் 'மெல்லிசை மாலை' நிகழ்ச்சி ஃபீனிக்ஸ் ஆர்கேடியா உயர்நிலைப் பள்ளிக் கலையரங்கத்தில் நடைபெற்றது. 300க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. சங்கத் தலைவர் ஜெகதீசன் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் தமிழ்த் திரைப் பாடல்கள் பாடப்பட்டன. சில பாடல்களுக்குக் குழுவினர் நடனம் ஆடினார். அவர்களுடன் சேர்ந்து பார்வையாளர்களும் ஆடினர். 'காதல் வந்தாலே' பாடலுக்கு 5 ஜோடி உள்ளூர் சூரியாக்களும் அனுஷ்காக்களும் ஆடிக் கைதட்டலைப் பெற்றனர். இறுதியில் மென்மையான 'நீ பாதி நான் பாதி' பாடலைக் குழுவினர் பாடினர்.

சங்கச் செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார். ஸ்வர்ணாவும், ரவிச்சந்திரனும் நிகழ்ச்சியை அழகாகத் தொகுத்து வழங்கினர். இந்நிகழ்ச்சியின் மூலமாக AID (Association for India's Development) நிறுவனத்திற்கு நிதி திரட்டப்பட்டது.

தெய்வநாயகம் மெய்யப்பன்,
அரிசோனா

© TamilOnline.com