'விஸ்வேதா' வழங்கும் டான்ஸ் மிர்ச்சி
மே 14, 2011 அன்று விஸ்வேதா கலை, கலாசார குழுவின் இரண்டாவது ஆண்டு பெரிய நாட்டிய சங்கமத் திருவிழாவான 'டான்ஸ் மிர்ச்சி' ஓலோனி கல்லூரியின் ஜாக்சன் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் திரட்டப்படும்

நிதி 'உதவும் கரங்கள்' தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்படும்.

'டான்ஸ் மிர்ச்சி' பெயருக்கேற்ப, பல நடன பாணிகளை (பரதம், ஜாஸ், கிராமியம், பாலே) இந்திய மாநிலக் கலைஞர்களை இணைத்து, மாபெரும் நடன விருந்து படைக்க உள்ளது. இதில் பங்கேற்கும் கலைஞர்கள் மொழியால், வயதால்,

திறமையால் வேறுபட்டாலும் தொண்டுணர்வில் ஒன்றுபட்டு இருக்கிறார்கள் என்பது சிறப்பு.

கலைகளைக் கற்க வயது ஒரு தடை அல்ல என்பதை விஸ்வேதா குழுமம் ஆர்வமுள்ள எல்லா வயதினருக்கும் கலைச் சேவையாற்றும் வாய்ப்பைத் தொண்டு உணர்வுடன் அளித்து வருகிறது.

நிகழ்ச்சிகளில் பங்கேற்க மேலும் விவரங்களுக்கு: www.visweta.org

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com