அட்லாண்டா தமிழ் சபையில் மகளிர் சிறப்பு ஆராதனை
அட்லாண்டா தமிழ் சபையில் பெண்கள் சிறப்பு மகளிர் ஆராதனை ஒன்றைச் சிறப்பாக நடத்தினர். சகோதரி சுபாஷினி ஆரம்ப ஜெபம் செய்ய சகோதரி சுசி பால்மர் தலைமையில் அட்லாண்டா சபையின் பெண்கள் பாடல் குழுவினர் ஆராதனையை நடத்தினார்கள். பிற மக்களுக்காகவும், உலக நாடுகளுக்காகவும் சகோதரி பெட்ரீஷியா வசந்த் இறைவனிடம் விண்ணப்பம் செய்தார். நகோமி-ரூத் ஆகிய வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள மாமியார் மருமகள் பற்றிய பெண்களுக்கான சிறப்புச் செய்தியை போதகர். பால்மர் பரமதாஸ் சுவையாக வழங்கினார். இந்த ஆராதனையைத் தொடர்ந்து ஓய்வுநாள் பாடசாலை சிறுவர் நிகழ்ச்சி நடைபெற்றது. குழந்தைகள் தமிழில் விவிலிய வேதவசனங்களை மனப்பாடமாகச் சொல்லிப் பாராட்டைப் பெற்றனர்.

போதகர் பால்மர் பரமதாஸ்,
அட்லாண்டா

© TamilOnline.com