கிளீவ்லேண்ட் தியாகராஜ ஆராதனை
2011 ஏப்ரல் 21 முதல் மே 1 வரை இந்த ஆண்டு கிளீவ்லேண்ட் தியாகராஜ ஆராதனை விழா நடைபெறும். இந்தியாவுக்கு வெளியே நடைபெறும் மிகப்பெரிய கலைவிழாவாகும் இது. இந்த வருடக் கலைவிழா நூற்றாண்டு காணும் நாட்டியமேதை வழுவூர் ராமையா பிள்ளைக்குச் சமர்ப்பணமாகிறது.

கடந்த 15 வருடங்களாக இசைப்போட்டிகளும் நடக்கின்றன. புல்லாங்குழல் டாக்டர் என். ரமணி, பாடகி சௌம்யா, கர்நாடிகா சகோதரர் சசிகிரண், ரவிகிரண், வேலூர் ராமபத்ரன், வயலின் நாகை முரளிதரன், பேராசிரியர். டி.ஆர். சுப்ரமண்யம், நெய்வேலி சந்தானகோபாலன் போன்றோர் போட்டிகளுக்கு நீதிபதிகளாக இருந்து சிறப்பிக்கின்றனர்.

டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா, டாக்டர் சுதா சேஷையன் மற்றும் பல பிரபலங்கள் கலந்துகொள்ளும் இந்த விழாவின் முழு விவரமும் இங்கே காணக் கிடைக்கும்: www.aradhana.org

செய்திக்குறிப்பு

© TamilOnline.com