மேக்னா சக்ரவர்த்தி பரதநாட்டியம்
பிப்ரவரி 20, 2011 அன்று சிவ-முருகன் கோயிலுக்கு நிதி திரட்டும் பொருட்டு, செல்வி மேக்னா சக்கரவர்த்தியின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி விறுவிறுப்பாகவும் சுவையாகவும் இருந்தது. பின்பாட்டுப் பாடியவரின் குரல் இனிமையாக இருந்தது. ஆழ்வார் பாடல்களுடன் தற்கால சினிமாப் பாடல் வரிகளையும் இணைத்துக் கொடுத்திருந்தது நன்று. வசீகரத்துடனும், தோற்றப் பொலிவுடனும் கச்சிதமான ஆடை, அலங்காரங்களுடன் தேர்ந்த ஜதிகளுடன் அழகான அங்க அசைவுகளோடு, முக பாவனைகளையும் காட்டி மேக்னா ஆடிய விதம் அருமை. மேக்னாவின் திறமையை வெளிப்படுத்திய குரு விஷால் ரமணியின் திறமையும் போற்றத் தகுந்தது.

இந்திரா ராமதுரை,
சன்னிவேல், கலிபோர்னியா

© TamilOnline.com