திருமங்கலம் பேருந்து நிலையம்


மதுரையின் திருமங்கலம் பேருந்து நிலையத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் படம் இது. புதுமுகம் வனிஷ்கா கதாநாயகியாக நடிக்கிறார். நாயகன் புதுமுகம் ஆசிஷ் மெஹ்ரா படத்தின் இயக்குநரும் கூட. இதில் சிறைக் குற்றவாளிகள் 30 பேரை முக்கியப் பாத்திரங்களில் நடிக்க வைத்துள்ளார். பேருந்து நிலையத்தை சுற்றிக் கொண்டிருக்கும் ஆறு இளைஞர்களை பற்றியது இந்தப் படம். திரைக்கதையை எழுதி, நடித்து, இயக்கும் ஆசிஷ் மெஹ்ராவே பாடல்களையும் எழுதியுள்ளார். ஹி‌த்‌தே‌ஷ்‌ இசையமைத்திருக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com