'பண்டிகை' தொடங்கும் நேரம்
அஜீத்குமாரை வைத்து 'திருப்பதி' என்ற படத்தை இயக்கி வரும் பேரரசு அடுத்த படத்திற்கான வேலையை ஆரம்பித்துவிட்டார். புதிய படத்திற்குக் கதை, திரைக்கதை, வசனம் தயாராகி வருகிறது.

'பண்டிகை' என்ற பெயரில் உருவாகும் இப்படத்தை ஆர்.எம். மூவிஸ் சார்பில் பாகனேரி ஆர்.எம். ராஜேந்திரன், எம். முருகசுந்தரம் ஆகியோர் தயாரித்து அளிக்கின்றனர். எஸ்.ஜே. சூர்யா நாயகன். நாயகி மற்றும் பிற நடிக, நடிகையர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

ஜனரஞ்சகமான காதல் கதையான 'பண்டிகை'யை முத்துவடுகு என்ற புதிய இயக்குநர் இயக்கவிருக்கிறார். பிரபல இயக்குனர் ஷங்கர் மற்றும் பேரரசுவிடம் உதவியாளராக பணியாற்றிய அனுபவம் முத்துவடுகுவுக்கு உண்டு.

தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

கேடிஸ்ரீ

© TamilOnline.com