சிவாவின் பதினாறு


சென்னை 28, சரோஜா, தமிழ்ப் படம், வ படங்களைத் தொடர்ந்து மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடிக்கும் படம் பதினாறு. மதுஷாலினி என்னும் புதுமுகம் கதாநாயகி. பரதன், வி.ஐ.பி., சுந்தர புருஷன், புன்னகைப் பூவே போன்ற வெற்றிப் படங்களைத் தந்த டி. சபாபதி இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். முதன்முதலில் யுவனின் இசையில் அவரது அண்ணன் கார்த்திக் ராஜா இப்படத்திற்காக ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். உண்மையான காதலை மையமாக கொண்ட இப்படத்தின் கதை, நகரத்திலும், கிராமத்திலும் என வெவ்வேறு காலகட்டங்களில் பயணிக்கிறது. இப்படத்தைப் பற்றி, "தமிழ் சினிமாவில் பதினாறு வயதினிலே படம் எப்படி ஒரு மாபெரும் மாற்றத்தை கொடுத்ததோ அதேபோல 'பதினாறு' படமும் ஒரு மாற்றத்தை கொடுக்கும்" என்கிறது ஒரு கோலிவுட் கோழி.

அரவிந்த்

© TamilOnline.com