சாக்ரமென்டோவில் 'விண்ணையும் தாண்டி சினிமாவா...'
ஜனவரி 22, 2010 அன்று சாக்ரமென்டோவில் 'அடடே க்ரியேஷன்ஸ்' வழங்கும் 'விண்ணையும் தாண்டி சினிமாவா...' என்ற நாடகம் ஒன்றை ரோஸ்மாண்ட் உயர்நிலைப் பள்ளி அரங்கில் அரங்கேற உள்ளது. நாடக ஆர்வலர்கள் சிலருடன் இணைந்து, ஜெயந்தி ஸ்ரீதர் 'அடடே க்ரியேஷன்ஸ்' அமைப்பை சாக்ரமென்டோவில் தொடங்கியுள்ளார். அதன் முதல் படைப்பு 'விண்ணையும் தாண்டி சினிமாவா...' என்ற நகைச்சுவை நாடகம். இதை அவரே எழுதி இயக்கியிருக்கிறார்.

இதில் சில புராண கால கதாபாத்திரங்களும் உண்டு. ஆதலால் சிறப்பான அரங்க வடிவமைப்பு, நேர்த்தியான ஆடை அணிகலன்கள் போன்றவற்றை உபயோகப் படுத்தவுள்ளார்கள். இசைப் பின்னணி சேர்க்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்று நடிப்பவர்கள் அனைவரும் திறைமை வாய்ந்த உள்ளூர்வாசிகள். இந்நாடகத்தின் மூலம் திரட்டப்படும் நிதி சாக்ரமென்டோ சித்தி விநாயகர் கோவில் (SVCC) கட்டும் நிதிக்கு கொடுக்கப்படவுள்ளது.

ஜெயந்தி ஸ்ரீதர்,
சாக்ரமென்டோ, கலிஃபோர்னியா

© TamilOnline.com