எத்தனை கட்டை?
ஒருமுறை அகாடமியில் மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயரின் கச்சேரி. பக்கவாத்தியக் கலைஞர்கள் எல்லோரும் தயாராக இருந்தார்கள். மிருதங்க வித்வான் மட்டும் புதியவர். விஸ்வநாத ஐயரின் சுருதி என்ன என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பி,

"அண்ணாவுக்கு எத்தனை கட்டை?" என்று கேட்டார்.

தம் உடலை முழுமையாக மேலும் கீழுமாகப் பார்த்துக் கொண்ட விஸ்வநாத ஐயர், "அதை இப்போ எப்படிச் சொல்ல முடியும்?" என்றார் குறும்புப் புன்னகையுடன்.



© TamilOnline.com