நவராத்திரி கர்நாடக இசைக் கச்சேரி
அக்டோபர் 28, 2010 அன்று கனெக்டிகட்டில் உள்ள வெஸ்லியன் பல்கலைக் கழகமும், ராகா சபையும் இணைந்து நடத்திய நவராத்திரி நிகழ்ச்சியில் ரஞ்சனி, காயத்ரி சகோதரிகள் கர்நாடக இசைக் கச்சேரி வழங்கினர். சிறப்பான இந்த இசை மழையுடன் சற்றே கவிதை மழையும் பெய்தது.

கர்நாடக, ஹிந்துஸ்தானி இசைக் கலைஞர்களை வளர்க்கும் நோக்கத்துடன் ராகா கிளப் கனெக்டிகட் மாநிலத்தில் இயங்கி வருகிறது. வருடத்தில் நான்கு முதல் ஐந்து தரமான இசைக்கச்சேரிகள் உறுப்பினர்களுக்கு இலவசமாகக் கேட்கக் கிடைப்பது ஒரு வரப்பிரசாதம். இதைத் தவிர வெஸ்லியன் பல்கலைகழகம் நடத்தும்நவராத்திரி விழாவும் சலுகையில் கிடைக்கும்.

மேலும் விவரங்களுக்கு: www.ragact.org

© TamilOnline.com