ஆல்ஃபரெட்டாவில் குழந்தைகள் தின விழா...
நவம்பர் 14, 2010 அன்று ஆல்ஃபரட்டா GATS-CMA தமிழ்ப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. ஜவஹர்லால் நேரு அவர்களின் புகைப்படம் வைத்து, அதில் ரோஜா மலர் சூட்டப்பட்டது. புகைப்படத்தின் அருகில் நேரு மாமா பற்றி எழுதப்பட்டிருந்த சிறுகுறிப்பைக் குழந்தைகள் ஆர்வத்துடன் படித்தனர்.

அன்று தமிழ் வகுப்பிலும் ஆசிரியர்கள் நேரு மாமா பற்றி குழந்தைகளுடன் சிறிய கலந்துரையாடல் செய்தனர். வகுப்புக்குத் திருமதிகள் அனிதா தங்கமணி, நித்யா எழில் ஆகியோர் சென்று மிட்டாய் வழங்கினர். இந்த நிகழ்வில் பள்ளி முதல்வர் திருமதி. சுந்தரி குமார், துணைமுதல்வர் திரு. இராஜா வேணுகோபால் ஆகியோர் உடனிருந்தனர்.

ராஜி முத்து,
ஆல்ஃபரெட்டா

© TamilOnline.com