கொலராடோவில் கண்ணதாசன் விழா
ஜூன் 27, 2010 அன்று கொலராடோ தமிழ்ச் சங்கம் டென்வர் நகரத்தில் கவிஞர் கண்ணதாசன் விழாவைக் கொண்டாடியது. சங்கத் தலைவர் திருமதி. லீலா ராஜசேகர் வரவேற்புரை ஆற்றினர். பிரபல மேடைப் பேச்சாளர் திருமதி. உமையாள் முத்து அவர்கள் "நான் நிரந்தரமானவன்-கண்ணதாசனும் கவிதையும்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

உமையாள் முத்து கண்ணதாசன் பற்றிய அரிய தகவல்களை, நகைச்சுவை கலந்த பேச்சின் மூலமாகப் பகிர்ந்துகொண்டார். அவர், கண்ணதாசனின் திரைப்படப் பாடல்கள் மட்டுமல்லாமல், மற்ற கவிதைகள், மத சம்பந்தமான இலக்கியங்களான அர்த்தமுள்ள இந்துமதம், இயேசு காவியம் பற்றியும் பேசினார்.

கொலராடோ தமிழ்ச் சங்கத் துணைத்தலைவர் திரு. மணிகண்டன் சங்கரன் நன்றியுரை ஆற்றினார்.

மணி சங்கரன்,
டென்வர், கொலராடோ

© TamilOnline.com