BATM தமிழ் விழா
செப்டம்பர் 19, 2010 அன்று வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் தமிழ் விழா கொண்டாடியது.

கவியரங்கம்: "ஊடக வானில் ஒளிர்கின்ற தமிழே!" என்ற தலைப்பில் ஊடகத்தில் பணிபுரியும் கனடாக் கவிஞர் புகாரி அவர்களின் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. இணையம், அச்சு, தொலைக்காட்சி, திரைப்படம், ஒலிக்காட்சி என்று ஊடகங்களைப் பிரித்து, அழகான கவிநயத்துடன் தலைவர் வழங்கிய பாங்கு தனிச்சிறப்பு. பதினொரு கவிஞர்கள் இதில் பங்கேற்றனர். இந்தக் கவியரங்கத்தை இணையத்தில் இங்கே கேட்கலாம்.

இலக்கிய விநாடி வினா: நாஞ்சில் ஏ. பீற்றர் அவர்கள் வாஷிங்டனிலிருந்து வந்து இலக்கிய வினா விடை ஒன்றை நிகழ்த்தினார். இதில் தில்லைக் குமரன் (மட்டுறுத்தல்), லேனா கண்ணப்பன் (ஒருங்கிணைப்பளர்) பொறுப்புகளை வகித்தனர். பாகீரதி சேஷப்பன் பாரதியார் அணித் தலைவராகவும், லோகு வெங்கடாச்சலம் பாரதிதாசன் அணித் தலைவராகவும், 25க்கும் மேற்பட்ட தமிழ் ஆர்வலர்களோடு பங்கேற்றனர்.

செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com