நேப்பர்வில் பரதப் பள்ளி வழங்கிய நாட்டிய நிகழ்ச்சி
அக்டோபர் 30, 2010 அன்று நேப்பர்வில்லின் (இல்லினாய்) பரதம் நடனக் கலைப்பள்ளி (Bharatam Academy of Dance Arts) நாட்டிய நிகழ்ச்சி ஒன்றை ஆஸ்வெகோ ஈஸ்ட் உயர்நிலைப் பள்ளி அரங்கத்தில் வழங்கியது. சற்றேறக்குறைய 90 நடனமணிகள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியை 600க்கும் மேற்பட்டோர் கண்டு களித்தனர். நடனப்பள்ளியின் கலை இயக்குனரான குரு வனிதா வீரவல்லியின் திறமையான வழிகாட்டலில் பார்ப்போருக்கு முழுமையான ரசானுபவத்தைக் கொடுத்தனர் என்றால் மிகையல்ல.

அலாரிப்பு, கவுத்துவம், வர்ணம், காவடிச்சிந்து, பதம் கீர்த்தனம், தில்லானா என்று பாரம்பரிய மார்கத்தில் அமைந்திருந்த நிகழ்ச்சியில் இளம் மாணவர் முதல் முதுநிலை மாணவர்வரை வழங்குவதற்கேற்ற உருப்படிகள் இடம்பெற்றிருந்தன.

மேலும் அறிய: www.bharatam.org
தொலைபேசி: 630.922.3107

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com