இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?


சின்னத்திரைத் தொகுப்பாளர் ஆனந்தக்கண்ணன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் இத்தனை நாளாய் எங்கிருந்தாய். நந்தகி நாயகியாக நடிக்கிறார். சுஜிபாலா, மலேசியா வாசுதேவன், தாமு உள்ளிட்டோரும் உடன் நடிக்கின்றனர். காலமெல்லாம் காதல் வாழ்க, உன்னுடன் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய ஆர். பாலு, நீண்ட இடைவெளிக்குப் பின் இப்படத்தை இயக்குகிறார். இப்படம் பற்றி அவர் "எனது பிற படங்களைப் போல் இதுவும் ஒரு காதல் படம்தான். காதலுடன், காஞ்சிபுரத்தில் வாழும் நெசவாளர்களின் வாழ்வியல் சார்ந்த பிரச்னைகளையும் இப்படத்தில் சொல்லியிருக்கிறேன்" என்கிறார். கதை - ஆர்.பாலு. திரைக்கதை, வசனம் - பபிதா பௌர்ணமி. பாடல்கள் - நா.முத்துக்குமார். இசை தினா.

அரவிந்த்

© TamilOnline.com